![](pmdr0.gif)
வ. சு. செங்கல்வராய பிள்ளை எழுதிய
தணிகைப் பத்து
taNikaippattu
of V.S. CengkalvarAya piLLai
In tamil script, unicode/utf-8 format
-
Acknowledgements:
Our Sincere thanks go to Mrs. Gnanapurani Madhvanath for providing us
with a printed copy of the work and to Dr. Anbumani Subramanian for scanning the pages.
Etext preparation and proof-reading: This etext was produced through Distributed Proof-reading approach.
We thank the following persons in the preparation and proof-reading of the etext:
R. Navaneethakrishnan, N. Pasupathy and V. Ramasami
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.
© Project Madurai, 1998-2011.
to preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
are
http://www.projectmadurai.org/
வ. சு. செங்கல்வராய பிள்ளை எழுதிய
தணிகைப் பத்து
-
Source:
தணிகைமணியின் "தணிகைப் பத்து"
தணிகைமணியின் நூற்று இருபத்தைந்தாம் ஆண்டு
நிறைவு நாள் வெளியீடு (15-8-1883 - 15-8-2008)
திருத்தணிகேசர் துணை
"திருத்தணிகேசர் எம்பாவை, பள்ளி எழுச்சி"
தணிகைமணி வ.சு.செங்கல்வராய பிள்ளை அவர்கள் எம்.ஏ.
இயற்றியவை
1959
ஸ்ரீ வள்ளிமலை சுவாமி சச்சிதாநந்தா
திருப்புகழ்ச் சபையின் வெளியீடு
விலை 10 காசு
------
1. திருத்தணிகேசர் எம்பாவை
திருத்தணிகேசர் எம்பாவை முற்றும்.
---------------------
2. திருத்தணிகேசர் திருப்பள்ளியெழுச்சி
--------------
நூல்கள் வந்தவழி
எந்தைதணி கேசர்இணையடிப் பத்திதனில்
முந்துமா ணிக்க முதல்வரவர் - சிந்தைவழி
'எம்பாவை' 'பள்ளி எழுச்சி' இவைவந்த
எம்பால் இறைவன் இருந்து.
-------
திருத்தணிகேசன் துணை
3. தணிகை - அன்னைப் பத்து
திருத்தணிகேசன் துணை
4. திருத்தணிகைக் கலிவெண்பா
சீரோங்கு வேற்றடக்கைச்
சீமானே! தென்தணிகை
ஏரோங்கு கோயி
லிருப்பானே! பேரோங்கு
வள்ளிமலை வாழ்வே!
வயலூர்ப் பெருமானே!
வெள்ளிமலை நாதர்
விழைந்தறியத் - தெள்ளுபொருள்
சொற்ற குருவே!
சுரகுஞ் சரிதழுவு
நற்றவமே! எட்டிகுடி
நாயகமே! - கற்றவர்கள்
கண்டு விழுங்குங்
கனியே! கடலமுதே!
வண்டுபண் செய்யும்
மலர்த் தொடையாய்! அண்டினருக்
கொன்றைத் தருவாய், மற்
றோரிருவர் பாலுகந்தாய்
அன்றுதொழ *மூவர்க்
கருள் புரிந்தாய் - நன்றுபுகழ்
-----------------
* திருத்தணிகையில் வீரட்டேசர் கோயில், விஜயராகவப்
பெருமாள் கோயில், பிரமதீர்த்தம் இதற்குச் சான்று.
சொன்ன ஒரு நால்வர்
சுவைப்பாட்டி லேயமர்ந்தாய்
பின்னமற நின்ற
பெருமானே! - என்னை
வருத்துமைவர் வல்லாட்டை
மாய்த்துமெய்ஞ் ஞானக்
கருத்தர்சே ராறிதெனக்
காட்டித் - திருத்தியுறத்
தக்க நிலைவைப்பாய்
*சத்த இருடிகளும்
புக்குப் பணியப்
புகலளித்தாய் - முக்கட்
கரும்பளித்த கண்ணே!
கவினிறைநற் பண்ணே!
சுரும்பமரும் நீபத்
தொடையாய்! விரும்புவரம்
வேண்ட வெறாதுதவு
வேந்தே! பரங்குன்றில்
வேண்டு மமரர்
மிக மகிழ - வேண்டிவரு
தேவர் தலைமகனாந்
தேவேந் திரன் மகளை
மூவர் மகிழ மண
முன்செய்தாய்! - யாவர்க்கும்
தீரதீர சூரைச்
செகுப்பதற்குச் செந்தூரில்
வீரவீர வீராதி
வீரனாய்த் - தேரமர்ந்த
-----------------------
* திருத்தணிகையில் சப்த ருஷிகள் பூசித்தனர்; அந்த இடம்
ஏழுசுனை என்று இப்போது வழங்குகின்றது.
தேவே! நஞ் செல்வத்
திருவாவி னன்குடியாய்!
சேவேறும் எந்தை
செவிக்கினிய - பாவேறு
மந்திரத்தை ஏரகத்தில்
வாய்விட் டுரைத்தருளுஞ்
சுந்தரத்துச் சோதிச்
சுடர்ப்பிழம்பே! - *சந்தமலை
தோறும்விளை யாடுகுக!
சோலைமலை வாழிறைவ!
ஆறுபடை வீட்டி
லமர்ந்தோனே! - நீறுபுனைந்
தேத்தி நினைப்போர்
இதயத் தமர்ந்துதவி
தோத்திரமுஞ் சொல்வதற்குச்
சொல்லருளும் - மூர்த்தியே!
ஆறு திருவெழுத்தும்
அன்பின் நிலைகண்டு
கூறுவமர் கண்ணிற்
குடிகொள்வோய்! - ஈறிலாய்!
ஓரெழுத்தி லாறெழுத்தை
ஓதுவித்தாய் என் தலையின்
ஈரெழுத்தை மாற்றாத
தென்னேநீ - நீரெழுத்தாய்;
நீலமலர் கண்டாலுன்
**நீலகிரி யேத்துவேன்;
நீலக் கடல்கண்டால்
நீலநிறக் - கோலமயில்
----------
*குன்றுதோறாடல், ** நீலகிரி - நீலோற்பலகிரி; திருத்தணிகை
தன்னை நினைந் தேபணிவேன்
சண்முகா! என் முன்னே
பொன்னனையார் கண்தான்
புலப்பட்டால் - மின்னயில்வேல்
சட்டென்று தோன்றிச்
சரணளிக்கும்; எங்கேனும்
சுட்ட பொரிகாணிற்
சுந்தர! என் - திட்டியிலே
தாரகையெ லாம்பொரியாத்
தான்கொறித்த நின் *சேவல்
நேரெதிரே வந்து
நிலைகாட்டும்; - ஆரமுதே!
சுண்டைக்காய் விற்கின்ற
சோலிக் குறத்திசெலின்
இண்டைக்கே வெட்சிபுனை
எம்மானே! 1கண்டைச்சீ
என்றஇனிப் பேகொண்ட
இன்பமொழி யாள்வள்ளி
குன்றி லுறையுங்
குறப்பேதை - என்றனையாள்
அம்மைபுரி பேரன்பும்
ஆறுமுகத் தப்பாவுன்
செம்மைநிறை பேரருளுந்
தேறுவேன்; - 2 சும்மை
---------------------------
* தாரகை (நட்சத்திரங்களை) கோழி நெல்லாக் கொறித்ததைக்
கல்லாடத்திற் காண்க.
1. கண்டு - கற்கண்டு 2. சும்மை - ஒலி
இடியும் மழையும்
எதிரின் இடையே
துடியாஞ் 1சசிவல்லி
தோன்றி - அடிமலர்தான்
இந்தா எனத்தந்
தெனக்கபயம் சொல்லிமிக
நந்தா வளங்கள்
நயந்தருளும்; எந்தாய்
2. முருகன் தனிவேல்
முனிநங் குருவென்
றருள்கொண் டறியார்
அறியும் - தரமோ"
முருக முருக
முருக முருகென்
றுருகி உரைப்போர்
உரையென் - னருகில்
உறக்கேட்டால் இவ்வுலகம்
உய்யஓ ரன்பர்
திறப்பட்டாற் சொற்சந்தஞ்
சேரும் - அறப்பாக்கள்
ஆகுந் திருப்புகழென்
அங்கம் புளகிக்கப்
பாகுங் கசந்திடப்
பண்ணியென்றன் - தேகமெலாம்
இன்பம் எழச்செய்யும்;
ஈசா! இவ் வாறேநான்
அன்பு குறையா
அடிமையாய் - என்புருகி
1. சசிவல்லி - தேவசேனை; 2. கந்தரநுபூதிச் செய்யுள்.
கந்தா! முருகா!
கருணா கர!குமரா!
மந்தா கினிமைந்த!
வானோர்தஞ் - சிந்தா
குலந்தவிர்த்த கோமானே!
கும்பிடுவார்க் கென்றும்
மலந்தவிர்க்கும் வாழ்வே!
வணங்கார் - பலந்தவிர்க்கும்
பண்ப! திருப்புகழைப்
பாடிப் பணிவோர்தம்
நண்ப! எனத்துதித்தே
நான்மீட்டும் - மண்புகா
வண்ணமெனை யாண்டருள்வாய்
வள்ளால்! தணிகேச!
எண்ணமிஃ தீடேற வே.
-----------
5. தணிகை நவரத்நமாலை (காமாலை நீங்க)
7-6-1921
6. தணிகை நாயகன் மாலை
Source:
தணிகைமணிராவ்பஹதூர் வ.சு. செங்கல்வராய பிள்ளை எம். ஏ.,
இயற்றியது.
ஆகஸ்ட் 1943
All Rights Reserved.
292, லிங்கசெட்டித் தெரு,
சென்னை விலை 0-4-0
-----------------------------------------------------------
பாரத்வாஜி
முகவைக் கண்ண முருகனார் அருளியது.
திருத்தணிகை நாயகன் சேவடிக்கே காதற்
கருத்துணவு செய்த களிப்பான் - மருத்தணியா
தோங்குமண மாலை யுவந்தணிந்தா னுண்டியளித்
தாங்குசெங் கல்வரா யன்.
-----------------------------------------------------------
முகவுரை
திருத்தணிகேசன் திருவருளாற் சென்ற சுபானு வருஷம் ஆவணி 1ந் தேதி (15-8-1883) பூராட நாளிற்
பிறந்த அடியேனுக்கு இப்பொழுது அறுபது ஆண்டு நிறைவாகின்ற நலங் கருதித் திருத்தணிகேசனது
திருவருளைப் பாராட்டிப் போற்றி 'அவனருளாலே அவன் தாள் வணங்கி' அவன் அளித்த
சொன்மலர்களைக் கொண்டு அவன் திருவடிகளிலே சமர்ப்பித்த மாலையாகும் இந்நூல்.
தணிகை நாயகனே! தேவர் கோன் மகளை ஏற்ற
உனது திருவருள் வேடர் மகளையும் ஏற்றதல்லவா? அது
போலப், பெருமானே! நக்கீரர், அருணகிரிநாதர் ஆதிய
பெருந் தமிழ்ப் புலவர்கள் பாடிய திப்பாடலை
ஏற்றருளிய நீ,
"அடியேன் உரைத்த புன் சொல்
அது மீது நித்தமுந் தண்
அருளே தழைத்துகந்து - வரவேணும்"
சுபாநு வருஷம்,
15-8-1943. வ.சு. செங்கல்வராய பிள்ளை.
-----------------------------------------------------------
திருத்தணிகேசன் துணை
சிறப்புப் பாயிரம்
பஞ்சலக்ஷண சரபம் இராசப்ப நாவலர்
பௌத்திரரும் பூவிருந்தவல்லி போர்டு உயர்தரப்
பாடசாலைத் தமிழாசிரியருமாகிய,
திருவாளர் ஜ. ராஜு முதலியார் அவர்கள்
இயற்றியது.
திருத்தணிகேசன் துணை
6. தணிகை நாயகன் மாலை
காப்பு
ஆபத் சகாய விநாயகர் துதி
வேலு மயிலுந் துணை.
திருத்தணிகேசன் துணை
7. தணிகைத் தசாங்கம்
நேரிசை வெண்பா
திருத்தணிகேசன் துணை
8. தணிகைப் பதிகம்.
பண் - தக்கராகம்; ராகம் - காம்போதி
('மடையில் வாளை' என்னும் தேவாரப் பண்)
9. தணிகாசல நாதர் பல்லாண்டு
---------------------
[1].தியாகர் - த்யாகப் பிரமம்:
[2]. முருகர் - ஸ்ரீ ரமண சந்நிதி முறைஆசிரியர்
திருத்தணிகேசன் துணை
10. தணிகை - தனிப்பாடல்கள்
("இரவு 4 1/2 மணிக்கு நல்ல கனவு கண்டேன். கனவின்
கருத்துப்பின்வரும் பாடல்களிற் காண்க) 19-8-1933
1. கனாநிலை
சந்நிதியி னின்றுபுக ழந்தாதி
பாடுந் தருணத்தி லந்தாதியில்
தணிமலைக் குரியதாம் சேர்ப்பது
மாலெனத் துவக்குந் தனிப்பாடலை
அந்நிலையி லோதுதற் கடியேன் மறந்திடலு
மன்றிரவு லென் கனவிலே
அண்டியொரு விப்பிரச் சிறுவனாய்த் தோன்றி
யுடையங்கம் பிரகாசமாக
நன்னிறத் தேகத்தில் வெண்ணிறத் திருநீறு
நன்றொளிர எதிரில் நின்று
"நல்லஎலு மிச்சம் பழமொன்று கந்தரந்
தாதியில் மறந்தனை" யென
என்னெதிரில் நின்றநீ சிறுவனலை முருகனே
என்றுரைத் தியான் பிடிக்க
எழுமுனே சிறிதோடி எழிலுரு மறைந்த
முருகேச தணிகேச இறையே.
விழித்த நிலை
ஓடி மறைந்த உடனே யென்
உடலஞ் சிலிர்க்க விழித்தெழுந்தேன்
நாடி யெனையும் ஒரு பொருளா
நயந்த கருணை என்னென்றேன்
வாடி வாடி முருகேசா வாவா
என்றே அலறினேன்
தேடி யுனையான் பிடிக்குமொரு
திறமே தென்றே திகைப்புற்றேன்.
வேண்டுநிலை
திகைக்கு மென்னையுந் தேற்றுதல் வேண்டுமே
றுகைக்கு முந்தைக்கன் றோம்பொருள் சொற்றனை
நகைக்கு நானிலங் கைவிழல் நன்னெஞ்சக்
குகைக்கு டங்கு குழந்தைக் குமரனே.
2. ஆறெழுத் தோது மறிவுமில்லை
ஆறுமுகா என்று சொல்வதில்லை
நீறெடுத் தென்றுந் தரிப்பதில்லை
நின்புகழ் என்செவி கேட்பதில்லை
மாறுபட் டென்னை மயக்குகின்ற
வஞ்சப் புலன்களின் சேட்டையாய
ஊறெழத் துய்யும் வகையராய
உத்தமனே தணிகைத் துரையே.
அஞ்செழுத் தென்று நினைப்பதில்லை
அரகர சிவசிவ வேல உன்றன்
கஞ்சமலர்ப் பதந் தஞ்சமென்று
கண்டிகை நீறு புனைவதில்லை
வஞ்ச மனத்தினிலஞ் சொடுக்கி
வைகலும் பூசனை செய்வதில்லை
உஞ்சும்வகை யெனக்கின் றருளாய்
உத்தமனே தணிகைத் துரையே.
சந்தத் தமிழிறை ருக்குவேத
சாரத் தமிழ் சொல் இறை முருக
கந்த கடம்ப குக குமர
கார்த்தி கேயாசிவ சண்முகா என்
றெந்தப் பொழுதினும் என்றனாவில்
இந்த நாமங்கள் யான் ஏத்துதற்குத்
தந்தருள் நின்னருள் சுவாமிநாத
தற்பரனே தணிகைத் துரையே.
3. திருத்தணிப்பதி
கருத்தில் வைத்திடில்
வருத்தமொன்றிலை
பெருத்த நன்மையே.
தணிகை மாமலை
பணிய நாடொறும்
நணுகி டாவினை
அணுகுமேதிரு.
காவியங்கிரி
நாவிலென்றுமே
ஓவலின்றியே
நீவிளம்புக.
நீலமாமலை
வேலவேல என்
றோலமேயிடு
சீலமேயுறு.
ஆரமேவுகல்
லாரமாமலை
வீரவேல் கழ
லாருநாடுக.
('பிருந்தாவனமும் நந்தகுமாரனும்'- பண்ணில் பாடியது)
4. தணிகா சலமும் எங்கள் குகேசனும்
யாவருக்கும் பொதுச்செல்வ மன்றோ!
ஏனோ! கண்ணே! இந்த விசாரம்
யார்தான் அருளால் வாழாதாரே
வேலின் துணைநமக் கிருப்பதி னாலே
காலனும் ஓலமிட் டோடானோ!
பத்தியிலே நம்புத்தி கலந்தால்
உலகே ஊஞ்சலில் ஆடாதோ!
கந்தனின் உன்னத லீலையை நினைத்தால்
தன்னையே மறந்திடச் செய்யாதா!
ஏனோ கண்ணே இந்த விசாரம்
யார்தான் அருளால் வாழா தாரே!
5. புத்தேள் பதினாறு
1. வேளைத் தணிமலைவாழ் வேந்தை அறுமுகப்புத்
தேளைத் தொழுவாய் தினம்.
2. நாளை எனாமல்நீ நந்தணிகை வாழ்வுறுபுத்
தேளை வணங்கு தினம்.
3. காளைக் குமரனைக் கந்தனை வேற்கரப்புத்
தேளைக் கருது தினம்.
4. பானை மணங்கமழும் பண்பார் தணிகைபுத்
தேளை நினைநீ தினம்.
5. வேளைப் படஎரித்த மெய்த்தேவின் சேயைப்புத்
தேளைப் புகல்நீ தினம்.
6. வாளைமீன் பாயும் மடுசேர் தணிமலைப்புத்
தேளை வழுத்து தினம்.
7. வேளை பாராது வியன்தணிகைச் சேயைப்புத்
தேளைநீ ஏத்து தினம்.
8. பூளை எருக்கு புனைசிவனார் சேயைப்புத்
தேளை நீ வாழ்த்து தினம்.
9. தாளைத் தொழுது தணிகை மலைவாழ்புத்
தேளைத் துதிநீ தினம்.
10. தோளைக் குளிரத் தொழுது தணிகைபுத்
தேளைப் பகர்நீ தினம்.
11. கோளைக் குறியாதே கொங்கார் தணிகைபுத்
தேளைக் குறிநீ தினம்.
12. தேளைப்பட அரவைச் சேர்சடையர் சேயைப்புத்
தேளைப் பரவு தினம்.
13. ஈளை தொடராது காண்எந்தை தணிகைப்புத்
தேளை உரைநீ தினம்.
14. சூளைச்செங் கல்போன்ற தூய்மையுடன் சேயைப்புத்
தேளைப் பணிநீ தினம்.
15. ஆளைப்பார் என்றமரர் அன்புகொளச் சேயைப்புத்
தேளைச்சூழ் வாய்நீ தினம்.
16. மூளை யிலையுனக்கு முத்துக் குமரனைப்புத்
தேளைநீ ஓது தினம்.
---------------
(முருகன் கருணை நினைந்து பாடியது)
6. கந்தனே! கருணைக் கடலே! உமை
மைந்தனே! மணியே! மணவாளனே!
தந்தையே
என்ன கருணைதான் என்மீ துனக்கைய
என்ன திருத்தொண்டு யான்செய்தேன் - என்ன
குணங்கண்டோ என்னைநீ கோதாட்டிக் கொண்டாய்
மணங்கொண்ட வள்ளிகண வா.
கந்தனென என்மனம் ஓர்நிலை காணக் கருணைபுரி
கந்த நமகந் தநம எனயான் கதறிடத்தன்
சந்தனக் காப்புத் திருவுறு என்மனம் தங்கிடவே
தந்தனன் ஓர்வரம் தென்தணி காசலச் சண்முகனே.
திருவடியிற் சிலம்பொலிகள் ஆர்ப்பக் கண்டேன்
செந்நிறத்துத் திருமார்பிற் புரிநூல் கண்டேன்
ஒருவடிவில் ஆறுமுகத் தழகு கண்டேன்
ஒளிவீசும் வடிவேலின் பொலிவுங் கண்டேன்
குருவடிவில் தந்தைக்கு ஞான போதம்
குறித்தருளும் மவுனநிலை தானுங் கண்டேன்
தருவடிவில் குறுமகள்முன் நிற்கக் கண்டேன்
தணிகைமலைச் சாமியைநான் கண்ட வாறே.
This file was last updated on 2 November 2011.
.